பிரான்சில் கொரோனாவினால் யாழ் இளைஞன் பரிதாப மரணம்!

பிரான்ஸில் யாழ் இளைஞர் ஒருவர் கொடிய கொரோனாவுக்கு பரிதாபமாக பலியாகியுள்ளார். யாழ். தாவடியை பிறப்பிடமாக கொண்ட, 32 வயதுடைய குணரட்ணம் கீர்த்திபன் (கீர்த்தி) என்ற இளைஞன் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இவர் கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவரும் ஆவார். இந்நிலையில் அவரது உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைக்க பொலிஸ்துறை மறுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.